தில்லி முதல்வர் கேஜரிவால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சிறையில் உள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு உடல்நிலை பாதிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 7 நாள்களாக சிறையில் உள்ள நிலையில் கேஜரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
கேஜரிவாலுக்கு இரத்த சர்க்கரை அளவு 46 ஆக குறைந்துள்ள நிலையில், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சிறையில் இருந்தபடியே முதல்வர் கேஜரிவால் அலுவலக உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.