FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

உணவுப் பொருள்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனையால் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 1,958.4 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Updated On : 21 மே 2024, 8:41 pm IST
பகிர்:

பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் உணவுப் பொருள்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனையால் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 1,958.4 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

2023 - 2024ம் நிதியாண்டில் மட்டும் டிக்கெட் விற்பனையால் ரூ. 3,279.9 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், பாப்கார்ன் போன்ற உணவுப் பொருள்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனையால் ரூ. 1,958.4 கோடி கிடைத்துள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய பிவிஆர் ஐநாக்ஸ் தலைமை செயல் அதிகாரி நிதின் சூட், ''கடந்த ஆண்டில் மட்டும் உணவுப் பொருள் - குளிர்பானங்கள் விற்பனையால் ரூ. 1,958.4 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ. 1,618 கோடியாக இருந்தது.

Advertisement

Advertisement

இதேபோன்று டிக்கெட் மூலம் கிடைத்த வருவாயும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 2,751.4 கோடி வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.3,279.9 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் ஹிட் படங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வெளியான நிலையில் இந்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

நிதிசேவைகளை வழங்கிவரும் எல்ரா கேபிடல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கரண் டெளரானி இது குறித்து பேசியதாவது, ''மெட்ரோ மற்றும் புறநகர் பகுதிகளிலும் பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகள் உள்ளதால், சினிமாவை பார்க்க வராதவரகளும் உணவுக்காக வருகை தருவது அதிகரித்துள்ளது. சோதனை அடிப்படையில் டெலிவரி சேவைகளையும் வழங்குகிறது. ஆனால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே இச்சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களின் விற்பனை அதிகரித்ததற்கு இது முக்கிய காரணம்'' எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments