திருப்பதி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதில் 4 பேர் பலியானார்கள்.
நெல்லூர் இந்துகூர்பேட்டையைச் சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு காரில் புறப்பட்டனர்.
இவர்களுடைய கார் சந்திரகிரி எம்.கொங்கரவாரிப்பள்ளி அருகே சித்தூர்-நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பத்தில் 4 பேர் பலியானார்கள். மேலும் காரில் பயணித்த 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
அதில் கவலைக்கிடமான நிலையில் ஒருவர் திருப்பதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து காவல்துறையிர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.