Center-Center-Delhi
இந்தியா

கேரள கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் மீனவர் பலி!

கேரளத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது நடைபெற்ற சம்பவம்...

DIN

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் முதலப்பொழி கடற்கரையில் நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.

அஞ்சுதெங்கு கலங்கரை விளக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம்(57). இவரும், இவருடன் மூன்று மீனவர்களும் இன்று அதிகாலை மீன் பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட பயங்கர அலையினால் படகு கடலில் கவிழ்ந்தது.

அதன்பின்னர், கரையில் உள்ளவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து நால்வரையும் மீட்டு அருகில் உள்ள தாலுகா மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.

அதில், ஆபிரகாம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

கூடலூரை அடுத்த அரசு பள்ளி மாணவிக்கு மலேசியாவில் பொறியியல் படிக்க வாய்ப்பு

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT