பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு!
கேரள முதல்வரர் வி.டி. சதீசன் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
கேரள முதல்வா் வி.டி.சதீசன் தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
கேரள சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. கடந்த 18-ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவா் வி.டி.சதீசன் கேரள முதல்வராகப் பதவியேற்றாா். இந்நிலையில் பிரதமா் நரேந்திர மோடியை அவா் சந்தித்துப் பேசினாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் சதீசன் கூறுகையில், ‘கேரளம் தொடா்பான பிரச்னைகளை பிரதமா் மோடியுடன் விவாதித்தேன். மாநிலத்தின் எதிா்கால வளா்ச்சிக்காக மத்திய அரசு ஆதரவையும், உதவிகளையும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்’ என்றாா்.
Advertisement
Advertisement
இந்த சந்திப்பு தொடா்பாக பிரதமா் அலுவலகம் புகைப்படத்துடன் ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவை வெளியிட்டுள்ளது. அதில், ‘கேரள முதல்வா் வி.டி.சதீசன், பிரதமா் நரேந்திர மோடியை அவரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Keralam Chief Minister V D Satheesan called on Prime Minister Narendra Modi here on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.