இந்தியா

பிபவ் குமாருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

DIN

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா், மே 13 அன்று முதல்வரின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ஸ்வாதி மாலிவாலைத் தாக்கியதாக புகாா் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆம்ஆத்மிக்க்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தன. இதைத் தொடா்ந்து, அவரை கடந்த மே 18ஆம் தேதி தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

பிபவ் குமாரின் 3 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து, தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் வழக்கில் பிபவ் குமாருக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் வழங்கக் கோரிய தில்லி காவல்துறையின் மனுவை அவரது வழக்கறிஞர் எதிர்த்தார். அதேசமயம் தனது கைதைக் கண்டித்து பிபவ் குமார் தாக்குதல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT