முகப்பு
இந்தியா

ராஜிநாமா செய்யாவிட்டால் கொலை செய்யப்படுவார்! முதல்வர் யோகிக்கு மிரட்டல்!

அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து பெறப்பட்ட 10 நாள் கெடு

Updated On : 3 நவம்பர் 2024, 12:44 pm IST
யோகி ஆதித்யநாத் - கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை மும்பை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மும்பை போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்ணுக்கு, சனிக்கிழமை (நவ. 2) மாலையில் பெறப்பட்ட குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டதாவது, ``10 நாள்களுக்குள் முதல்வர் பதவியை யோகி ஆதித்யநாத் ராஜிநாமா செய்யாவிட்டால், அவரும் பாபா சித்திக்கைப் போல கொல்லப்படுவார்’’ என்று கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து பெறப்பட்டதால், கொலை மிரட்டல் விடுத்த நபரை மும்பை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அண்மையில் ஹிந்தி நடிகர் சல்மான் கான், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜீஸான் சித்திக்குக்கும் கொலை மிரட்டல் வந்தது. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காய்கறி விற்பவர்கூட சல்மான் கானிடம் பணம்கேட்டு கொலை மிரட்டல் விடுத்து, பின்னர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments