முகப்பு
இந்தியா

மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

வாக்குவாதத்தின்போது தலையில் கல்லால் தாக்கிய நிலையில் உயிரிழப்பு

Updated On : 7 நவம்பர், 2024 at 11:19 AM
கோப்புப் படம்
பகிர்:

நாக்பூர் அருகே மதுபோதையில் நண்பர்கள் இடையேயான வாக்குவாதத்தால் ஒருவர் பலியானார்.

மத்தியப் பிரதேசத்தில் சூதாட்டத்திற்கு சென்று திரும்பிய 26 மற்றும் 20 வயதான நண்பர்கள் இருவர், மது அருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் நாக்பூர் அருகே செல்லும்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

வாக்குவாதம் முற்றி, காரைவிட்டு இறங்கிய நிலையில், இருவருக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, 20 வயது நபரின் தலையில் கல்லால் தாக்கியதால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, காயமடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நண்பரைக் கொலை செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →