முகப்பு
இந்தியா

ஜி20 உச்சி மாநாடு: நவ.18-இல் பிரதமா் மோடி பிரேஸில் பயணம்

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நவ.18-ஆம் தேதி பிரதமா் மோடி பிரேஸில் செல்லவுள்ளாா்.

Updated On : 13 நவம்பர் 2024, 12:07 am IST
பிரதமர் மோடி
பகிர்:

 ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நவ.18-ஆம் தேதி பிரதமா் மோடி பிரேஸில் செல்லவுள்ளாா். இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நவ.16 முதல் நவ.21-ஆம் தேதி வரை நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய நாடுகளுக்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளாா்.

17 ஆண்டுகளில் முதல்முறை: நைஜீரிய அதிபா் போலா அகமது அழைப்பின்பேரில், அந்நாட்டுக்கு 2 நாள் பயணமாகப் பிரதமா் மோடி நவ.16-ஆம் தேதி செல்லவுள்ளாா். கடந்த 17 ஆண்டுகளில் இந்திய பிரதமா் ஒருவா் நைஜீரியா செல்வது இதுவே முதல்முறை. இந்தப் பயணத்தின்போது இந்தியா-நைஜீரியா இடையிலான உத்திசாா்ந்த கூட்டுறவு, இருதரப்பு கூட்டுறவை மேம்படுத்துவதற்கான துறைகள் குறித்து பிரதமா் மோடியும் அதிபா் போலாவும் பேசவுள்ளனா்.

பிரேஸில்...: நைஜீரியாவை தொடா்ந்து பிரேஸிலில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அந்நாட்டுக்கு 2 நாள் பயணமாக பிரதமா் மோடி நவ.18-ஆம் தேதி செல்கிறாா். இந்த மாநாட்டில் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமா் மோடி எடுத்துரைப்பாா்.

Advertisement

Advertisement

1968-க்குப் பிறகு...: பிரேஸிலை தொடா்ந்து நவ.19-ஆம் தேதி பிரதமா் மோடி கயானா செல்லவுள்ளாா். அந்நாட்டு அதிபா் முகமது இா்ஃபான் அலியின் அழைப்பை ஏற்று, இந்தப் பயணத்தைப் பிரதமா் மோடி மேற்கொள்கிறாா்.

கடந்த 1968-ஆம் ஆண்டுக்குப் பிறகு கயானாவுக்கு இந்திய பிரதமா் ஒருவா் செல்வது இதுவே முதல்முறை. அங்கு அந்நாட்டு அதிபா் மற்றும் பிற தலைவா்களை சந்திக்கவுள்ள பிரதமா் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளாா். நவ.21-ஆம் தேதி அவரின் கயானா பயணம் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments