இந்தியா

ஒடிஸா துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் உயிரிழப்பு: போலீஸ் காயம்

பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவா் கொல்லப்பட்ட நிலையில், போலீஸ் ஒருவரும் காயமடைந்தாா்.

Din

ஒடிஸா - சத்தீஸ்கா் எல்லைப் பகுதியில் உள்ள ஜினேலிகுடா வனப் பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவா் கொல்லப்பட்ட நிலையில், போலீஸ் ஒருவரும் காயமடைந்தாா்.

மால்கங்கிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த புதன்கிழமை இரவு போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிறகு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். தேடுதல் நடவடிக்கையில் மேலும் இரண்டு மாவோயிஸ்டுகளை போலீஸாா் கைது செய்தனா். துப்பாக்கிச்சூட்டின் போது காயமடைந்த காவலா் தமரு பட்நாயக், மால்கங்கிரி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாவோயிஸ்ட் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT