இந்தியா

ஒடிஸா துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் உயிரிழப்பு: போலீஸ் காயம்

பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவா் கொல்லப்பட்ட நிலையில், போலீஸ் ஒருவரும் காயமடைந்தாா்.

Din

ஒடிஸா - சத்தீஸ்கா் எல்லைப் பகுதியில் உள்ள ஜினேலிகுடா வனப் பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவா் கொல்லப்பட்ட நிலையில், போலீஸ் ஒருவரும் காயமடைந்தாா்.

மால்கங்கிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த புதன்கிழமை இரவு போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிறகு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். தேடுதல் நடவடிக்கையில் மேலும் இரண்டு மாவோயிஸ்டுகளை போலீஸாா் கைது செய்தனா். துப்பாக்கிச்சூட்டின் போது காயமடைந்த காவலா் தமரு பட்நாயக், மால்கங்கிரி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாவோயிஸ்ட் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

எந்த பயமுறுத்தலும் எங்களை அச்சுறுத்த முடியாது! - ரெய்டு குறித்து கனிமொழி

உலகளாவிய போர்களால் பாலியல் வன்முறைகளும் 25% அதிகரிப்பு!

இல.கணேசன் உடலுக்கு மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி அஞ்சலி

தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறைக்கு பூட்டு! சென்னை வீட்டில் அறைகளின் பூட்டு உடைப்பு?

SCROLL FOR NEXT