கோப்புப் படம் 
இந்தியா

கர்நாடக இடைத்தேர்தல்: 3-ல் ஒரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!

3 தொகுதிகளில் ஒரு தொகுதியில் காங்கிரஸும் , 2 தொகுதிகளில் பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் முன்னிலை

DIN

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

கர்நாடகத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்களின் தொகுதிகளில் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. சந்தூர், ஷிக்காவன், சென்னப்பட்டணம் ஆகிய 3 தொகுதிகளில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவ. 23) காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 9.30 மணி நிலவரப்படி, சந்தூரில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஷிக்காவன், சென்னப்பட்டணம் ஆகிய இரு தொகுதிகளில் பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியும் (எஸ்) முன்னிலை வகிக்கின்றன.

இவற்றில் சந்தூர், ஷிக்காவன் தொகுதிகளில் பாஜகவும் காங்கிரஸும் நேருக்கு நேர் போட்டியில் களமிறங்கியுள்ளன.

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நவ. 13 ஆம் தேதியிலேயே ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, பிகாரில் 4, கா்நாடகத்தில் 3, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2, கேரளம், சத்தீஸ்கா், மேகாலயம், குஜராத்தில் தலா ஒரு தொகுதி என 33 பேரவை தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

மகாராஷ்டிரத்தில் உள்ள நாந்தேட் மக்களவை தொகுதிக்கும், உத்தர பிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, உத்தரகண்ட் மற்றும் கேரளத்தில் தலா ஒரு தொகுதி என 15 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT