சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா கோப்புப் படம்
இந்தியா

சிக்கிம் இடைத்தேர்தல் வெற்றி அறிவிப்பு!!

போட்டியாளரின்றி ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

DIN

சிக்கிம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சிக்கிம் மாநிலத்தின் நம்சி, சோரெங் தொகுதிகளில் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்றது.

இந்த நிலையில், தேர்தலில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் பவன் சாம்லிங் தலைமையிலான எதிர்க்கட்சி சிக்கிம் ஜனநாயக முன்னணிக் கட்சி அறிவித்தது.

இதனையடுத்து, ஆளுங்கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், சோரெங் தொகுதியில் ஆதித்யா கோலேவும், நம்சி தொகுதியில் சதீஷ் சந்திரராயும் வெற்றி பெற்றுள்ளனர்.

முதல்வர் பிரேம் சிங் தமங் மகன்தான், சோரெங் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT