முகப்பு
இந்தியா

அசாம் சிறையில் 5 விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம்!

பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தது..

Updated On : 11 அக்டோபர் 2024, 4:36 pm IST
ராஜஸ்தான் சிறையில் 16 கைதிகள் தப்பியோட்டம்
பகிர்:

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்ட சிறையிலிருந்து விசாரணைக் கைதிகள் ஐந்து பேர் தப்பிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோரிகான் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஐந்து பேரும் இன்று காலை தப்பியுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில்,

Advertisement

Advertisement

கைதிகள் 5 பேரும் அடைக்கப்பட்டிருந்த அறையின் இருத்மபு கம்பிகளை உடைத்து வெளியேறியுள்ளனர். பின்னர் படுக்கை விரிப்புகள், போர்வைகளைக் கயிறாகத் திரித்து அதன்மூலம் 29 அடி உயரச் சுவரில் ஏறி குதித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 பேரையும் கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments