அசாம் சிறையில் 5 விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம்!
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தது..
அசாம் மாநிலம் மோரிகான் மாவட்ட சிறையிலிருந்து விசாரணைக் கைதிகள் ஐந்து பேர் தப்பிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோரிகான் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஐந்து பேரும் இன்று காலை தப்பியுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில்,
Advertisement
Advertisement
கைதிகள் 5 பேரும் அடைக்கப்பட்டிருந்த அறையின் இருத்மபு கம்பிகளை உடைத்து வெளியேறியுள்ளனர். பின்னர் படுக்கை விரிப்புகள், போர்வைகளைக் கயிறாகத் திரித்து அதன்மூலம் 29 அடி உயரச் சுவரில் ஏறி குதித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 பேரையும் கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.