இந்தியா

ஒடிஸா: டானா புயல் கரையை கடக்க தொடங்கியது!

சூறாவளிக் காற்று மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை...

DIN

ஒடிஸாவில் ‘டானா’ புயல் இன்று(அக். 25) கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நள்ளிரவு 12.30 மணி நிலவரப்படி, ஒடிஸாவின் பாரதீப் பகுதிக்கு கிழக்கு-வடகிழக்கே 50 கி.மீ. தொலைவிலும், தாமரா பகுதிக்கு தெற்கு- தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு தென்மேற்கே 160 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ள டானா புயல் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிஸா - மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை ஒட்டி, ஒடிஸாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு இடையே பிதர்காணிகா - தாமராவுகு இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை கரையை கடக்க உள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 3 - 4 மணி நேரத்துக்கு, மேற்கண்ட பகுதிகளில் அதிவேக சூறாவளிக் காற்று மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

”விஜய்யுடன் சேர முயற்சித்த காங்கிரஸ்! முடியாமல்தான் திமுகவுடன் இருக்கிறார்கள்!” நயினார் நாகேந்திரன்

EPS-க்கு தோல்வி பயம்! செங்கோட்டையன் விமர்சனம்! | TVK | ADMK

மணிப்பூரில் பதற்றம்.. முதல்வர் பதவியேற்ற மறுநாளே கலவரம்!

SCROLL FOR NEXT