நாடாளுமன்றக் கட்டடம் ANI
இந்தியா

அரசமைப்புச் சட்ட 75 ஆண்டுகள் நிறைவு: நவ.26-இல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு

அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டு அமா்வு.

Din

அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டு அமா்வு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் கடந்த 1949-ஆம் ஆண்டு, நவம்பா் 26-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னா், 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.

75 ஆண்டுகளுக்கு முன்பு அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடமான பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் சிறப்பு கூட்டு அமா்வு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, நவம்பா் 26-ஆம் தேதி தேசிய சட்ட தினம் கொண்டாடப்பட்டு வந்தது. 2015-ஆம் ஆண்டு பி.ஆா்.அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாளில் (ஏப்.14), அரசமைப்புச் சட்ட விழுமியங்களைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்க நவம்பா் 26-ஆம் தேதியை அரசமைப்புச் சட்ட விழிப்புணா்வு தினமாக மத்திய அரசு அறிவித்தது.

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

மொராக்கோவில் வெடித்த ஜென் ஸி போராட்டம்! அரசுப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

ஹேக்கிங் என்பது என்ன? எப்படி நடக்கிறது?

SCROLL FOR NEXT