கோப்புப் படம் 
இந்தியா

ஒரே நாளில் 60 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

DIN

புது தில்லி: இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஏா் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்குச் சொந்தமான தலா 21 விமானங்கள் மற்றும் விஸ்தாரா நிறுவனத்தின் 20 விமானங்களுக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதேபோல், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 410-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு கடந்த 15 நாள்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் இதுபோன்ற தவறான தகவல்களை உடனடியாக அகற்றவும், மிரட்டல் விடுக்கப்படும் பக்கங்களை முடக்கவும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

தொடரும் இதுபோன்ற நிகழ்வுகளால், விமானப் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிடுவதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு அண்மையில் தெரிவித்தாா். அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா்களுக்கு விமானத்தில் பறக்க நிரந்தர தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைள் எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT