சந்தீப் கோஷ் 
இந்தியா

சந்தீப் கோஷின் மருத்துவப் பதிவு ரத்து!

ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் மருத்துவப் பதிவை மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது.

DIN

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் மருத்துவப் பதிவை மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது.

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார்.

முன்னதாகவே அவர் தனது கல்லூரி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து சந்தீப் கோஷிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்துள்ளது.

சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 'பெண் மருத்துவர் கொலையில் சந்தீப் கோஷ் பல்வேறு விஷயங்களை மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. கொலையை தற்கொலையாக மாற்ற முயற்சிகள் நடந்துள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சந்தீப் கோஷின் மருத்துவப் பயிற்சி பதிவை ரத்து செய்து மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று(செப். 19) முதல் இது நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தீப் கோஷ் மருத்துவப் பணி செய்ய முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT