பேருந்து விபத்து: தீயில் சிக்கிய பெண்
பேருந்து விபத்துக்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கட்வால் பகுதியில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு, பேருந்து தீப்பற்றி எரிந்ததில் ஒரு பெண் பலியாகியுள்ளார். மேலும், பேருந்தில் பயணித்த மூவர் காயமுற்றுள்ளனர்.
பேருந்தில் சிக்கிய பெண் தீயில் பலியாகியுள்ளார். ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த மற்ற மூன்று பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்களின் உயிருக்குப் பாதிப்பில்லை.
பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக சென்றது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
Advertisement
இதையும் படிக்க: அரவிந்த் கேஜரிவாலுக்கு 4-வது முறையாக சம்மன்
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.