FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் பற்றி...

Updated On : 2 ஏப்ரல் 2025, 10:20 am IST
ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை
பகிர்:

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை செய்து வருகிறார்.

நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து விவாதம் நடத்தவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, எம்பிக்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளின் கொறடாக்களும் உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். வக்ஃப் மசோதாவை எதிர்ப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடனான ஆலோசனையில், வக்ஃப் மசோதாவை எதிர்ப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments