(கோப்புப்படம்) DIN
இந்தியா

ஜார்க்கண்ட்: குளத்தில் மூழ்கி 4 பெண்கள் பலி

ஜார்க்கண்ட்டில் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உள்பட 4 பெண்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஜார்க்கண்ட்டில் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உள்பட 4 பெண்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், கர்வா மாவட்டத்தில் உள்ள குளத்தில் வெள்ளிக்கிழமை இரண்டு சிறுமிகள் உள்பட 4 பெண்கள் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது அதில் பெண் ஒருவர் ஆழமான பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில், மற்ற 3 பெண்களும் குளத்தில் குதித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் 4 பேரும் நீரில் மூழ்கி பலியானதாக அதிகாரி சஞ்சய் குமார் பாண்டே தெரிவித்தார்.

கோடையை குளிர்விக்கும் குறைந்த விலை டவர் ஃபேன்கள்!

பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீஸார் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக கர்வா சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியானவர்கள் லாடோ சிங்(10), மிதி சிங் (15), ரோமா சிங் (18) மற்றும் அங்கிதா சிங் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT