இந்தியா வல்லரசாக சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வேண்டும்: நிதின் கட்கரி
வல்லரசாக வேண்டுமானால் முதலில் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்: நிதின் கட்கரி
Updated On : 14 ஏப்ரல், 2025 at 7:15 PM
மும்பை: மகாராஷ்டிரத்தில் இன்று(ஏப். 14) நடைபெற்ற ஹிந்து மத அமைப்பு சார் நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நம் நாட்டில் முதலில் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.
Updated On : 14 ஏப்ரல், 2025 at 7:37 PM
அவர் பேசியதாவது: “நமது தேசம் வளர்ச்சியடைந்ததொரு நாடாக மாற வேண்டுமானால்., நம் நாட்டை உலக குருவாக மாற்ற வேண்டுமாயின்., உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நமது நாட்டை மாற்ற வேண்டுமானால்., நமது பிரதமர் விருப்பப்படி, 5 பில்லியன் டாலர் பொருளாதாரமாக நமது நாடு மாற வேண்டுமானால், முதலில் சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பை எழுப்ப வேண்டும்“ என்றார்.