மும்பை: மகாராஷ்டிரத்தில் இன்று(ஏப். 14) நடைபெற்ற ஹிந்து மத அமைப்பு சார் நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நம் நாட்டில் முதலில் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது: “நமது தேசம் வளர்ச்சியடைந்ததொரு நாடாக மாற வேண்டுமானால்., நம் நாட்டை உலக குருவாக மாற்ற வேண்டுமாயின்., உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நமது நாட்டை மாற்ற வேண்டுமானால்., நமது பிரதமர் விருப்பப்படி, 5 பில்லியன் டாலர் பொருளாதாரமாக நமது நாடு மாற வேண்டுமானால், முதலில் சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பை எழுப்ப வேண்டும்“ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.