கோப்புப் படம் 
இந்தியா

விவசாயிகளிடம் 31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 5 லட்சம் மெட்ரிக் டன் கடுகு கொள்முதல்!

ஹரியாணாவில் விவசாயிகளிடமிருந்து முழுவதும் மொத்தம் 31.52 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

DIN

சண்டிகர்: ஹரியாணாவில் விவசாயிகளிடமிருந்து முழுவதும் மொத்தம் 31.52 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய கொள்முதல் இன்று வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான தொகை ரூ.1,400 கோடி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி வரையில் 18.24 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. அதே வேளையில் 2025-26ல் ரபி சந்தைப்படுத்தல் பருவத்தில் அதாவது மார்ச் 15 முதல் மாநிலத்தில் கடுகு கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கடுகு கொள்முதல் செய்யும் பணியை மாநிலத்தில் உள்ள எச்ஏஎஃப்இடி (HAFED) மற்றும் ஹரியானா கிடங்கு கழகம் ஆகியவை செய்து வருகின்ற நிலையில் இந்த ஆண்டு இன்று வரை 4.93 லட்சம் மெட்ரிக் டன் கடுகு முகவர்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசு சுமார் 1.71 லட்சம் விவசாயிகளிடமிருந்து கடுகு கொள்முதல் செய்துள்ளதாகவும், இதற்காக ரூ.1,843 கோடி அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தொடர்ந்து 4-வது நாளாக சென்செக்ஸ் 1,509 புள்ளிகளும், நிஃப்டி 414 புள்ளிகளுடன் உயர்ந்து முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் நடக்கிறதா? அரசுத் திட்டங்கள் பெயரில் பண மோசடி!

“Karur பற்றிய கேள்விகளைத் தவிர்க்கலாம்!” செந்தில் பாலாஜி காட்டம்! | DMK | TVK | VIJAY

மோலிவுட்டிலிருந்து... அஸ்வதி!

சொந்த ஊரில் கிடா வெட்டி விருந்தளிந்த தனுஷ்!

டார்ஜிலிங்கில் நிலச்சரிவு: 7 பேர் பலி; பலர் மாயம்! - பிரதமர் மோடி இரங்கல்

SCROLL FOR NEXT