நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகள் - கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டதாக அறிவிப்பு

DIN

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் திரும்பபெறப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாரிகளுக்கு எரிபொருளான டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடிகளில் லாரி ஓட்டுநர்கள் துன்புறுத்தல் போன்ற பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியில் இருந்து லாரிகளின் இயக்கத்தை நிறுத்திவைத்து 129 லாரி சங்கங்களை உள்ளடக்கிய கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு வேலை நிறுத்தம் அறிவித்தது.

இந்தப் போராட்டத்தில் உள்மாநிலத்துக்குள்ளேயும், வெளிமாநிலங்களுக்கும் இயக்கப்படும் 6 லட்சம் லாரிகள் பங்கேற்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காய்கறி, உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது.

இதனிடையே, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தின் கூட்டமைப்புத் தலைவர் ஜி.சண்முகப்பா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதாகவும், முதலில் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த முதல்கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், முதல்வர் சித்தராமையா இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்தப் பேச்சுவார்த்தையிலும் சமரசம் ஏற்படவில்லை.

தொடர்ந்து, கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் மீண்டும் இன்று முதல்வர் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

SCROLL FOR NEXT