முகப்பு
இந்தியா

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுவாமி ட்வீட்

பெஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமருக்கு ஓய்வளிக்குமாறு பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி எக்ஸ் பதிவு

Updated On : 23 ஏப்ரல், 2025 at 10:31 PM
பிரதமர் நரேந்திர மோடி - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப் படம்) - ENS
பகிர்:

பெஹல்காம் தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் ஓய்வளிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சுப்ரமணியன் சுவாமி தெரிவித்ததாவது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வைத்துக்கொண்டு, இனி பாஜக ஆட்சியமைக்க முடியாது.

கடந்த கால அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டதைப் போன்று, இவர்களுக்கும் ஓய்வளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ’லஷ்கர்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ’தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மத்திய அரசு வெளியிட்ட தாக்குதல் நடத்தியவர்களின் மாதிரி ஓவியங்களைச் சுட்டிக்காட்டி, அவர்கள் மூவரும் பாகிஸ்தானியர்கள்போல் உள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.

இதனிடையே, அட்டாரி - வாகா எல்லையை மூடவும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேறவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், முப்படைகளும் தயார் நிலையில் இருக்கவும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.