முகப்பு
இந்தியா

பஹல்காம்: 35 தமிழர்கள் தில்லி திரும்பினர்!

தில்லி திரும்பிய 35 தமிழர்கள் தொடர்பாக....

Updated On : 23 ஏப்ரல் 2025, 3:46 pm IST
தில்லி திரும்பிய 35 தமிழர்கள்.
பகிர்:

ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் தில்லி திரும்பினர்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

தாக்குதலில் பலியான 26 பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலா இருவர், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, குஜராத்தைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.

Advertisement

அதேபோல், உயிரிழந்த 2 வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அங்கு சிக்கியுள்ள 35 தமிழர்கள் தங்களுடைய பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு தில்லி திரும்பியுள்ளனர்.

இவர்கள் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 35 தமிழர்களும் இன்று (ஏப். 23) இரவு சென்னை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கூகுள் பிக்சல் 9ஏ அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.