கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்
கன்னியாஸ்திரிகள் பிணையில் விடுவிப்பு...
சத்தீஸ்கரில் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக கன்னியாஸ்திரிகளை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் சிறுமிகள் மூவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முற்பற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் உள்பட மூவருக்கு சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை(ஆக. 2) நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
முன்னதாக, இவர்களது ஜாமீன் மனு கீழமை நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின், என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
வழக்கின் விசாரணையில், துர்க் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் 3 சிறுமிகளை அழைத்துச் சென்று ப்ரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இரு கன்னியாஸ்திரிகள் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக வாதிடப்பட்டது. இந்தநிலையில், எதிர் தரப்பிலிருந்து வாதிட்ட வழக்குரைஞர், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவராக இருக்கும் 3 பெண்களும் சிறுமிகள் அல்ல; 18 வயது நிரம்பிய பெண்கள் என்று கன்னியாஸ்திரிகள் தரப்பிலிருந்து எடுத்துரைக்கப்பட்டது.
இதனையடுத்து விசாரணைக்குப்பின், குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் ரூ. 50,000 நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் பாஸ்போர்ட்களை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Chhattisgarh court grants bail to two Kerala nuns in human trafficking-religious conversion case
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.