ராஜ்நாத் சிங் 
இந்தியா

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

ஆதாரங்களை வெளிப்படுத்த ராகுலுக்கு ராஜ்நாத் சிங் சவால் விடுத்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தன்னிடம் வைத்திருப்பதாகக் கூறப்படும் ஆதாரங்களின் அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சவால் விடுத்துள்ளார்.

மாநில தலைநகரில் ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்த விழாவில் உரையாற்றிய ராஜ்நாத் சிங் கூறுகையில்,

பிகாரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறுக்கு வழி. அதில் என்டிஏ கீழ் ஒரு பாதை மேலும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அதேசமயம் மற்றொரு பாதை இந்தியா கூட்டணியின் கீழ் மாநிலத்தை அதன் பழைய நிலைக்கு அதாவது நீதியின்மை மற்றும் ஜாதி மோதலுக்குக் கொண்டு செல்லும். மாநிலத்தை எந்தவழியில் கொண்டுசெல்வது என்பது மக்கள் கையில்தான் உள்ளது.

ராகுல்காந்தி தன்னிடம் ஒரு அணுகுண்டு இருப்பதாகக் கூறுகிறார். அப்படியானால் அவர் உடனடியாக அதை வெடிக்கச் செய்து, தன்னை ஆபத்திலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும்.

முன்னதாக, ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பூகம்பம் வெடிக்கும் என்று மிரட்டினார், ஆனால் அவரின் நாடாளுமன்ற உரையில் அது ஈரமான பொய்யாக மாறியது.

இந்தியத் தேர்தல் ஆணையம் கேள்விக்கு இடமில்லாத நேர்மைக்கு நற்பெயரைக் கொண்ட ஒரு நிறுவனம். மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

அரசியலமைப்பு அமைப்பு குறித்து அற்பமான அறிக்கைகளை வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்குப் பொருந்தாது. அவரது சொந்தக் கட்சியின் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளது என காங்கிரஸ் தலைவருக்கு அவர் நினைவூட்டினார். இவ்வாறு அவர் பேசினார்.

Defence Minister Rajnath Singh on Saturday slammed Congress leader Rahul Gandhi for claiming to have an “atom bomb of evidence” which would prove that the Election Commission was committing “vote theft” in Bihar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT