இந்தியா

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

ஒடிஸாவில் ஆண் நண்பரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பரபரப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

ஒடிஸாவில் ஆண் நண்பர் ஒருவரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஸா மாநிலத்தின் படபடா கிராமத்தில் மூன்றாமாண்டு மாணவி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது ஆண் நண்பர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அம்மாணவி நீண்டகாலமாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

காலை 11 மணியளவில் வீட்டுக்கு வந்த அவரின் பெற்றோர், நீண்ட நேரமாக தங்களின் மகள் வெளியே வராததால், சந்தேகமடைந்து அறையின் கதவை அடித்து உடைத்து உள்நுழைந்தனர்.

இந்த நிலையில்தான், தங்களின் மகள் தீக்குளித்து கடுமையான தீக்காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒடிஸாவில் கடந்த ஒரு மாதத்திலேயே இது மூன்றாவது தீக்குளிப்பு சம்பவமாகும். ஜூலை 12-ல் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர், தனது துறைத் தலைவர் பாலியல் தொல்லை அளிப்பதாகக் கூறி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். ஜூலை 19-ல் பாலங்காவில் 15 வயது சிறுமி ஒருவரும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Odisha college student dies by suicide by self-immolation after alleged blackmail by friend

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

அமெரிக்காவின் 50% வரியால் இந்தியாவின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும்!

குளுகுளு குல்பி... ப்ரியம்வதா!

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல்..! ராகுல் கண்டனம்

SCROLL FOR NEXT