முகப்பு
இந்தியா

சுக்மாவில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மாணவிகள்!

சுக்மாவில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் மாணவிகள் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்..

Updated On : 9 ஆகஸ்ட், 2025 at 1:43 PM
ரக்ஷா பந்தன்
பகிர்:

நக்சல்களால் பாதிக்கப்பட்ட சுக்மா மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் மாணவிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்புப் பணியாளர்களுடன் ரக்ஷா பந்தனைக் கொண்டாடினர்.

டோனாபாலில் உள்ள சிஆர்பிஎஃப்-ன் 74-கூது பட்டாலியனின் இந்த நிகழ்வு நடைபெற்றது. அங்கு சுவாமி ஆத்மானந்தா பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து ரக்ஷா பந்தனை உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர்.

இதுதொடர்பாக சிஆர்பிஎஃப் ஆய்வாளர் மஹேந்திர பிஸ்த் கூறுகையில்,

Advertisement

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, டோனாபாலில் உள்ள 74வது சிஆர்பிஎஃப் பட்டாலியனில், சுவாமி ஆத்மானந்த் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் மகிழ்ச்சியுடனும் ராக்கியைக் கொண்டாட ஒன்று கூடினர்.

இந்த நேரத்தில் நம் சகோதரிகளை நாம் தவறவிடாமல் இருக்க, அவர்கள் எங்களுடன் பண்டிகையைக் கொண்டாடினர். அவர்களைப் பாதுகாப்பதாக நான் உறுதியளிக்கிறேன். இந்த பகுதியில் நக்சலிசத்தை எதிர்த்துப் போராடுவதில் சிஆர்பி ஏற்கனவே ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறினார்.

summary

In a heartwarming gesture, women and girl students in the Naxal-affected Sukma district celebrated Raksha Bandhan with security personnel of the Central Reserve Police Force (CRPF) on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.