உத்தர்காசியில் வெள்ளப்பெருக்கு PTI
இந்தியா

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மட்டுமில்லாது வட மாநிலங்களான உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கு...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீர் மட்டுமில்லாது வட மாநிலங்களான உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீா் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் அண்மையில் மழை-வெள்ள பாதிப்பால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

உத்தரகண்ட்டில் தலைநகர் டேராடூனில் உள்ள மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டேராடூன், பாகேஷ்வர், சாமோலி, சம்பாவாட், பிதோராகர், ருத்ரபிரயாக், தேரி, உத்தர்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்புகளால் பலத்த மழை கொட்டித் தீா்த்து, பெருவெள்ளமும், நிலச்சரிவும் நீடித்து வருகின்றன.

ஹிமாசல பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தில் இன்று(ஆக. 17) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மண்டியிலிருந்து குளு செல்லும் வழித்தடத்தில் சண்டீகர் - மணாலி தேசிய நெடுஞ்சாலையில் பனார்சா, டகோலி, நாக்வை ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Himachal Pradesh, Uttarakhand Multiple flash flood incidents reported today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு

கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்

SCROLL FOR NEXT