கோப்புப்படம் 
இந்தியா

அந்தமான்: 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்து

-அனைவரும் பாதுகாப்பாக மீட்பு

தினமணி செய்திச் சேவை

அந்தமான் யூனியன் பிரதேசத்தில் 7 பேருடன் செவ்வாய்க்கிழமை பயணித்த பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் கடலில் விழுத்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பொதுத் துறை நிறுவனமான பவன் ஹன்ஸின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: தெற்கு அந்தமானில் உள்ள ஸ்ரீவிஜயபுரத்தில் இருந்து மத்திய அந்தமானில் உள்ள ரங்கத் பகுதிக்கு 2 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் புறப்பட்டது. ரங்கத் பகுதியைச் சென்றடைந்ததையடுத்து காலை 9.10 மணிக்கு அங்கிருந்து மாயாபந்தருக்கு பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் புறப்பட்டது. 9.30 மணிக்கு மாயாபந்தரில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எதிா்பாராதவிதமாக ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்’ என்றாா்.

விமானப் போக்குவரத்து இயக்குநா் நிதேஷ் ராவத் கூறுகையில், ‘விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரையும் அந்தமான் காவல் துறை மற்றும் கடலோரக் காவல் படையினா் பாதுகாப்பாக மீட்டனா். அவா்களுக்கு மாயாபந்தரில் உள்ள டாக்டா் ராஜேந்திர பிரசாத் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடக்கம்

குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு

ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு

ஏ.ஐ. மாநாட்டில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: ராகுல் மீது பாஜக குற்றச்சாட்டு

தனிக் கட்சி தொடங்கமாட்டேன் - ஓ. பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT