ராஜஸ்தானில் அதிர்ச்சி 
இந்தியா

டிரம்மில் அழுகிய உடல்: மனைவி, குழந்தைகள் மாயம்; நடந்தது என்ன?

ராஜஸ்தானில் அல்வாரில் டிரம்மில் அழுகிய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ராஜஸ்தானில் அல்வாரில் டிரம்மில் அழுகிய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் திஜாரா மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் காலனியில் நடைபெற்றது. வீட்டு உரிமையாளர், அவரின் மகள் ஏதோ வேலைக்காக மொட்டை மாடிக்குச் சென்றுள்ளனர். அங்குத் துர்நாற்றம் ஏற்படவே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வீட்டைத் திறந்துபார்த்தனர். அப்போது வீட்டின் மேல்பகுதியிலிருந்த டிரம்முக்குள் ஹான்ஸ்ராமின் உடல் சிறைந்த நிலையில் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

ஹான்ஸ்ராமின் கழுத்து பகுதி கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டும், உடல் சிதைவதைத் தடுப்பதற்காக டிரம்ப் முழுவதும் உப்பு போடப்பட்டு இருந்தது. ஹான்ஸ்ராமின் உடலை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

விசாரணையில் ஹான்ஸ்ராமின் மனைவி, மூன்று குழந்தைகள் கடந்த சில நாள்களாகக் காணாமல் போயுள்ளனர். அதேசமயம் வீட்டு உரிமையாளரின் மகனும் மாயமாகியுள்ளார்.

ஹான்ஸ்ராமின் உடல் டிரம்மில் எவ்வளவு நாள்களாக உள்ளது.. கொலைக்கான காரணம் என்ன என்பதைப் பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Man's Body Found Rotting In A Drum In Rajasthan, Wife And Children Missing

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமா இதுவரை கண்டிராதது... காந்தாரா பற்றி சந்தீப் வங்கா!

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில் பக்தர்களை அலறவிட்ட ஒற்றைக் காட்டு யானை!

கொலம்பியாவில் இந்திய வாகனங்களை பார்ப்பதில் பெருமை! ராகுல்

மால்வேர் தாக்குதலிலிருந்து தற்காப்பது எப்படி?

SCROLL FOR NEXT