பஞ்சாப் போலீஸ் 
இந்தியா

3-ஆவது திருமணத்துக்குப் பின் காதலனுடன் ஓடிய இளம்பெண்: பேத்தியைக் கொன்று வீசிய தாத்தா - பாட்டி!

பேத்தியைக் கொன்று வீசிய இளம்பெண்ணின் தாய் - தந்தையர் மீது வழக்கு...

இணையதளச் செய்திப் பிரிவு

3-ஆவது திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் அதன்பின் தனது காதலனுடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணின் 6 வயது மகளை, பெண்ணின் பெற்றோர் கொன்று வீசிய கொடுந்துயரமும் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அரங்கேறியுள்ளது.

வீட்டைவிட்டுச் செல்லும் முன் அந்த இளம்பெண் தமது ஒரே மகளை தமது பெற்றோரிடம் விட்டுச் சென்றுள்ளார். இந்தநிலையில், தாயைக் காணாததால் அடம்பிடித்து அழுதுகொண்டிருந்த குழந்தையை, இளம்பெண்ணின் பெற்றோர் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அப்பகுதியில் நெடுஞ்சாலையோரம் ஓடும் கால்வாயில் உடலை வீசிச்சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, சடலத்தைக் கைப்பற்றி போலீஸார் மேற்கண்ட விசாரணையில் கொல்லப்பட்ட குழந்தையின் தாத்தாவும் பாட்டியும் நடந்தவற்றை சொல்லி குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்கள் மீது கொலைக் குற்றத்தின்கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

62 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

இன்று முதல் 3 நாள்களுக்கு 18 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

எம்பிபிஎஸ்: அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின; முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு

ரயிலில் கடத்தப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல்

பள்ளிக் கல்வி அமைச்சருடன் பேச்சு: டிட்டோ-ஜேக் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT