கோப்புப்படம் 
இந்தியா

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: சுவரை உடைத்து தொழிலாளர்களை மீட்ட தீயணைப்புப் படை!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அமோனியா வாயு கசிவு...

இணையதளச் செய்திப் பிரிவு

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்ததால் வெளியேற முடியாமல் தவித்த தொழிலாளர்களை ஆலை சுவரை உடைத்து தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை(ஆக. 25) மாலை 5.15 மணியளவில் அமோனியா வாயு கசிந்ததால் பதற்றமான சூழல் அங்கு நிலவுகிறது.

ஆலை உள்ளே தொழிலாளர்கள் பலர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை வெளியே மீட்டு அழைத்து வரும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், ஆலை சுவரை தகர்த்து உள்ளே சென்று 30 தொழிலாளர்களை மீட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வாயுக்கசிவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Ammonia Gas Leak At Milk Factory In Jalandhar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டுக்கல் மாநகராட்சி நிதி முறைகேடு: முன்னாள் ஆணையா் உள்பட 6 போ் மீது வழக்கு

கட்டடத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பானிபூரி விற்பனையாளா்களை தாக்கிய சிறுவா்கள் கைது

நெல்லையப்பா் கோயில் குறித்த வழக்கு: அறநிலையத் துறை அதிகாரி முன்னிலையாக உத்தரவு

வாட்ஸ்ஆப்-இல் மாநகராட்சி சேவைகள்: புதிய திட்டம் தொடக்கம்!

SCROLL FOR NEXT