ஞானேஷ் குமார் Center-Center-Chennai
இந்தியா

சர்வதேச தேர்தல் நிறுவனத்தின் தலைவராக ஞானேஷ் குமார் டிச. 3-இல் பதவியேற்பு!

ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனம்(ஐ.டி.இ.ஏ) தலைவராக ஞானேஷ் குமார் பதவியேற்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

சர்வதேச தேர்தல் நிறுவனத்தின் தலைவராக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியேற்றுக் கொள்ள உள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் பதவியாக இந்தப் பொறுப்பு அமைந்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “நியாயமான முறையிலும், வெளிப்படைத் தன்மையுடன் இந்தியாவில் தேர்தல்கள் நடைபெற்றிருப்பதை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. இந்த நிலையில், அதன் வெளிப்பாடாக, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக, ‘ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐ.டி.இ.ஏ)’ தலைமைப் பதவியேற்றுக்கொள்ள 37 ஜனநாயக நாடுகள் இணைந்து இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இது, அனைத்து இந்தியர்களுக்கும், அதேபோல தேர்தல் அதிகாரிகளுக்கும் பெருமிதம் அளிக்கும் தருணமாக அமைந்துவிட்டது” என்றார். இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், டிச. 3-இல் சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்றுக்கொள்கிறார்.

Gyanesh Kumar assuming charge as Chairperson of International IDEA

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹலோ டிசம்பர்... அஞ்சு குரியன்!

இரவு 10 மணி வரை சென்னை, புறநகருக்கு பலத்த மழை எச்சரிக்கை!

டிசம்பர் புன்னகை... இவானா!

"நாடகம் வேண்டாம்!" மோடி Vs கார்கே | செய்திகள்: சில வரிகளில் | 1.12.25

சென்னையில் திரளும் மேகக்கூட்டம்... மழை மேலும் அதிகரிக்கும்..!

SCROLL FOR NEXT