கோப்பிலிருந்து படம் Center-Center-Chennai
இந்தியா

ஹரியாணாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய ஒளி மின் அமைப்பு: முதல்வர் நாயப் சிங் சைனி

ஹரியாணாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய ஆற்றல் மின்சார அமைப்புகளை நிறுவ முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஹரியாணாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய ஒளி மின் அமைப்புகளை நிறுவ வேண்டுமென அம்மாநில முதல்வர் நாயப் சிங் சைனி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்துதல் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவில் மின் துறை மீதான நிதி நிலை அறிக்கை குறித்து முதல்வர் நாயப் சிங் சைனி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நையாப் சிங் சைனி பேசும்போது, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு வளாகங்களிலும் மேல்நிலை சூரிய ஆற்றல் மின் அமைப்புகளை நிறுவ அதிகாரிகளுக்கு அறுவுறுத்தினார். மாநிலத்தில் வீடுகளில் சூரிய ஆற்றல் மின் அமைப்புகளை நிறுவுவதை அதிகாரிகள் விரிவுபடுத்திடவும் அறிவுறுத்தினார்.

மேலும், சூரிய ஆற்றல் பூங்காக்களை ஹரியாணாவில் அமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொது இடங்களில், அதிலும் குறிப்பாக மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மக்களின் பாதுகாப்பு கருதி, பழைய மற்றும் மோசமான நிலையில் இருக்கும் மின் கம்பங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பேசிய ஹரியாணா மின்சார உற்பத்தி கழகத்தின் தலைவர் ஷியாமல் மிஸ்ரா, 2027-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் ஹரியாணாவில் 2 லட்சத்து 22 ஆயிரம் சூரிய ஆற்றல் மின் அமைப்புகளை நிறுவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

Haryana Chief Minister Nayab Singh Saini on Saturday directed that all government buildings like schools, colleges, hospitals, offices, etc, be equipped with rooftop solar systems to accelerate the state's transition towards clean and green energy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனம் புரியா இயக்கம்... கீர்த்தி சுரேஷ்!

டிச.8இல் திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

பாபர் மசூதி இடிப்பு: இந்திய அரசமைப்பை பலவீனமாக்கிய கருப்பு நாள்! -ஓவைசி

சோனியா, ராகுல் ஆதரவாளர்களுக்கு தொல்லையளிப்பதே அமலாக்கத் துறையின் நோக்கம்: கர்நாடக துணை முதல்வர்

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி

SCROLL FOR NEXT