இமயமலைப் பகுதிகளில் பனிச் சுற்றுலா திட்டம்: உத்தரகண்ட்டில் விரைவில் அமல்!
பனிக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக விரைவில் புதுத் திட்டம் அமல்படுத்தப்படுவது பற்றி...
உத்தரகண்ட்டில் இமயமலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக விரைவில் பனிச் சுற்றுலா திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. ‘பனிச் சிறுத்தை சுற்றுலா’ என்ற பெயரில் சோதனை முறையில் அறிமுகமாகவுள்ள இத்திட்டத்தில், இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள கங்கோத்ரி தேசிய பூங்காவானது சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும். பனிக்காலத்தில் சுற்றுலாவை ஈர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், அப்பகுதிகளில் சாகச விளையாட்டுகள், தங்குமிடங்கள், உள்ளூர் வழிகாட்டிகள் மற்றும் பிற செயல்பாடுகள் ஆகியவை இத்திட்டத்தால் பலனடையும். இதனால் பொருளாதாரம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கையிங், ட்ரெக்கிங், பாராக்ளைடிங், ராப்பெல்லிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுகள் ஆலி, காலியா டாப், பெட்நிதார் ஆகிய பகுதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இவற்றை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, ரிஷிகேஷில் சர்வதேச யோகா விழாவும், முசோரி, நைநிடால், உத்தரகாசியில் குளிர்காலத் திருவிழாக்களும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்கால சுற்றுலா திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர், இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ள பனிச் சிறுத்தை பார்வையிடுதல், ஹெலிகாப்டர் ஸ்கையிங் சாகசம், இமயமலை கார் ஊர்வலம் ஆகியவற்றை உடனடியாக தொடங்கிட அறிவுறுத்தியுள்ளார். மேலும், பைதானி, பௌரியில் அமைந்துள்ள ராகு கோவில் புனரமைப்பு மற்றும் அலங்கரித்தல் பணிகளையும் விரைவில் தொடங்கிடவும் அவர் அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To give a new direction to winter tourism in Uttarakhand, the government will soon launch a "Snow Leopard Tour", State Tourism Secretary Dhiraj Garbyal said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.