அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்பு ஸ்கேனர்: இந்தியன் வங்கி ரூ.38 லட்சம் நன்கொடை!
திருப்பதி தேவஸ்தானத்திற்கு இந்தியன் வங்கி நன்கொடை பற்றி..
திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் ஸ்கேனரை நிறுவுவதற்காக இந்தியன் வங்கி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 38 லட்சம் நன்கொடை அளித்துள்ளது.
இந்தியன் வங்கியின் அதிகாரி ஒருவர், இந்த நன்கொடைக்கான வரவோலையைத் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி சி. வெங்கய்யா சௌதரியிடம் வழங்கினார்.
அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பயணப் பொதி ஸ்கேனரை நிறுவுவதற்காக இந்தியன் வங்கி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 37,97,508 தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது என்று கோயில் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Indian Bank has donated Rs 38 lakh to TTD for installing a security luggage scanner at Alipiri Check Post.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.