ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்
ஹரியாணாவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
ஹரியாணாவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
ஹரியாணாவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவானது.
மதியம் 12.13 மணிக்கு உணரப்பட்ட நிலநடுக்கத்தின் மையம் ரோஹ்தக்கில் 5 கி.மீ ஆழத்தில் இருந்தது என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதம் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.
summary