தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை சந்தித்தார்.
தில்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மாநில வளர்ச்சி சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள் பயணமாக தில்லி சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்களை அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான விவகாரமும் இந்த சந்திப்பில் முக்கிய இடம் பெறும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் மகர சங்கராந்திக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் எனத் தெரிகிறது. நிதீஷ் குமார், பிகார் முதல்வராக பதவியேற்ற பிறகு அவரின் முதல் தில்லி பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.