அமித் ஷா - நிதீஷ்குமார். (கோப்புப்படம்)  ANI
இந்தியா

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை சந்தித்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை சந்தித்தார்.

தில்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மாநில வளர்ச்சி சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள் பயணமாக தில்லி சென்றுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்களை அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான விவகாரமும் இந்த சந்திப்பில் முக்கிய இடம் பெறும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் மகர சங்கராந்திக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் எனத் தெரிகிறது. நிதீஷ் குமார், பிகார் முதல்வராக பதவியேற்ற பிறகு அவரின் முதல் தில்லி பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Union Home Minister Amit Shah on Monday met Bihar Chief Minister Nitish Kumar, who is visiting the national capital for the first time after being sworn-in for a record fifth consecutive term a month ago.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும்! முதல்வர் வாக்குறுதி!

மகளிர் கணக்கில் உரிமைத் தொகை ரூ. 5,000 வரவு! முதல்வர் அறிவிப்பு!

தேசிய பேரிடா் மீட்பு படை தளத்தில் நாய் பயிற்சி பள்ளி நிறைவு அணிவகுப்பு

செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கு ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

கீழப்பாவூரில் திமுக பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT