குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துள்ளார்.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 26) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இந்தச் சந்திப்புக்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
summary