குடியரசுத் துணைத் தலைவருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சந்திப்பு!
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சந்திப்பு..
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சந்தித்துள்ளார்.
தில்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவரின் மாளிகையில், சி.பி. ராதாகிருஷ்ணனை, இன்று (டிச. 26) தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் அனுபவங்களை, குடியரசுத் துணைத் தலைவருடன் ஞானேஷ் குமார் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இத்துடன், தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் இந்தோனேசியா நாட்டின் தூதர் இனா. எச். கிருஷ்ணமூர்த்தி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நேரில் சந்தித்துள்ளார்.
முன்னதாக, ஞானேஷ் குமார் தலைவராகப் பதவி வகிக்கும் சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனத்தில் (ஐடிஇஏ), இந்தோனேசியா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Chief Election Commissioner, Gyanesh Kumar, has met with the Vice President, C.P. Radhakrishnan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.