கேரளம்: முதல் ஜென் ஸீ நகராட்சித் தலைவர்!
கேரளத்தில் நகராட்சித் தலைவராக முதன்முறையாக 21 வயது இளம்பெண் தியா பினு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேரளத்தில் நகராட்சித் தலைவராக முதன்முறையாக 21 வயது இளம்பெண் தியா பினு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தின் பாலா நகராட்சியில் 21 வயதேயான இளங்கலை பொருளாதாரத்தில் பட்டம்பெற்ற தியா பினு சுயேட்சையாகப் போட்டியிட்டார்.
தொடர்ந்து, யுடிஎஃப் ஆதவுடன் நகராட்சித் தலைவராக தியா பானு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், மிக இளம் வயது நகராட்சித் தலைவர் என்ற பெருமையையும் தியா பினு பெற்றார்.
Advertisement
Advertisement
நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தியா பேசுகையில், "இந்த உயரிய பொறுப்பை நான் மதிக்கிறேன். பாலா நகராட்சியின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக்காக என்னால் முடிந்தவரையில் பாடுபடுவேன்.
எனது 25 சக கவுன்சிலர்களின் முழு மனதான ஆதரவை எதிர்பார்க்கிறேன். நகராட்சியை வழிநடத்துவதில் அவர்களின் ஆலோசனையை நான் மதிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
தியாவின் தந்தை மற்றும் மாமாவும் சுயேட்சையாகப் போட்டியிட்டு, தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
கேரளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அதிக இடங்களில் வெற்றி பெற்றநிலையில், ஆளுங்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) பெரும் பின்னடைவை பெற்றது.
21 Y/O Diya Binu,Kerala’s Pala as India’s youngest municipal chairperson promises development
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.