ஹிமாசலத்தில் மருத்துவர்கள் தொடர் போராட்டம்: நோயாளிகள் அவதி!
ஹிமாசலத்தில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் பற்றி...
ஹிமாசலத்தில் மருத்துவர்கள் போராட்டம் :
ஷிம்லா : ஹிமாசல பிரதேசத்தில் மருத்துவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் நோயாளிகள் உரிய மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகினர். மருத்துவர்கள் மீதான அரசின் சில நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் சனிக்கிழமை (டிச. 27) முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் ஹிமாசல பிரதேசத்தில் மருத்துவர்கள் சங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, வெளிநோயாளிகள் சனிக்கிழமை(டிச. 27) உரிய மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகினர். இவ்விவகாரத்தில் அரசும் மருத்துவர்களும் விரைந்து பேசி சுமூக தீர்வு காண அவர்கள் வலியுறுத்தினர். ஆயினும், உள்நோயாளிகள் பிரிவிலும் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கான சிகிச்சை தடையின்றி நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Himachal Pradesh: Patients face difficulties as OPD and other services are affected due to a doctors' strike.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.