ம.பி.: மயானம் அருகே இறந்த பச்சிளம் குழந்தையின் உடலைக் கவ்வியபடி திரிந்த தெரு நாய்!
மத்தியப் பிரதேசத்தில் மயானம் அருகே இறந்த பச்சிளம் குழந்தையின் உடலைக் கவ்வியபடி திரிந்த தெரு நாயால் பரபரப்பு நிலவியது.
மத்தியப் பிரதேசத்தில் மயானம் அருகே இறந்த பச்சிளம் குழந்தையின் உடலைக் கவ்வியபடி திரிந்த தெரு நாயால் பரபரப்பு நிலவியது.
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள பராஷரி மயானம் அருகே இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை வாயில் கவ்வியபடி தெரு நாய் தூக்கிச்சென்றதைக் கண்டு ஞாயிற்றுக்கிழமை மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இறுதிச் சடங்குகளுக்காக மயானத்துக்கு வந்திருந்தவர்கள் அந்த நாயைக் கண்டதும் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். கஞ்ச் பசோடா தெஹத் காவல் அதிகாரி மனோஜ் துபே கூறுகையில், இறந்த அந்த குழந்தை நான்கு முதல் ஐந்து மாத வயதுடையதாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
மயானம் அருகே சில சமயங்களில் குழந்தைகள் அடக்கம் செய்யப்படும் சம்பவங்கள் உள்ளதாகவும், பேட்ஜர்கள் போன்ற விலங்குகள் நிலத்தை தோண்டி உடல்களை வெளியே கொண்டு வந்துவிடுன்றன. அதேபோன்று இந்த உடலும் வெளியில் வந்திருக்கலாம்.
அதனை நாய்கள் எடுத்துச் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. இறந்த அந்த குழந்தையின் உடலை மீண்டும் அடக்கம் செய்து, சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
A stray dog was found carrying a newborn child's body in its jaws near Parashari cremation ground in Vidisha district of Madhya Pradesh on Sunday, leaving locals shocked.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.