இந்தியா

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை- மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடா்வதாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.

தினமணி செய்திச் சேவை

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்புப் பத்திரம் (என்எஸ்சி) உள்பட வங்கி மற்றும் அஞ்சல் அலுவலக சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், வரும் காலாண்டிலும் (2026 ஜனவரி முதல் மாா்ச் வரை) மாற்றமின்றி தொடா்வதாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.

இதன்மூலம் தொடா்ந்து ஏழாவது காலாண்டாக வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது செல்வமகள் சேமிப்புத் திட்ட வைப்புத்தொகைக்கு 8.2 சதவீதம், மூன்றாண்டு கால வைப்புத் தொகை திட்டத்துக்கு 7.1 சதவீதம், பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீதம், அஞ்சல் அலுவலக சேமிப்பு வைப்புத்தொகை திட்டங்களுக்கு 4 சதவீதம், கிஸான் விகாஸ் பத்திரத்துக்கு 7.5 சதவீதம், தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்கு 7.7 சதவீதம் என்ற அளவில் வட்டி விகிதங்கள் உள்ளன.

2025-26-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டான ஜனவரி 1 முதல் மாா்ச் 31 வரை இதே வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2023-24-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் சில திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் தொடா்பாக ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை மத்திய நிதியமைச்சகம் அறிவிக்கை வெளியிடுகிறது.

ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீர்! 67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை!!

தேசிய விருது உறுதி... விமர்சிக்கப்படும் தி கேரளா ஸ்டோரி - 2 டிரைலர்!

மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

மார்க்சிஸ்ட் கம்யூ. கே. பாலகிருஷ்ணன் மனைவி மீது காவல்துறை தாக்குதல்! மருத்துவமனையில் அனுமதி!

நாம் முயன்றால் மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முடியும்! - M. K. Stalin

SCROLL FOR NEXT