பார்வையாளர்கள் கூடத்தில் சிதறி விழுந்த பட்டாசுகள், பதறும் மக்கள் படம் | எக்ஸ்
இந்தியா

கால்பந்து திடலில் பார்வையாளர்கள் கூடத்தில் வெடித்த பட்டாசு! 30 பேர் படுகாயம்

கேரளத்தில் கால்பந்து திடலில் வெடித்த பட்டாசு பார்வையாளர்கள் கூடத்தில் சிதறி விழுந்ததில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

DIN

கேரளத்தில் கால்பந்து திடலில் வெடித்த பட்டாசு பார்வையாளர்கள் கூடத்தில் சிதறி விழுந்ததில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட அரீகோடு பகுதியில் நெல்லிகுத் மற்றும் மாவூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

இறுதிப்போட்டி என்பதால் இப்போட்டி தொடங்குவதற்கு முன்பு திடலில் பட்டாசு வெடிக்கப்பட்டது. திடலில் வெடித்த பட்டாசு சிதறி பார்வையாளர்கள் கூடத்தில் விழுந்து வெடித்தது. இதனால் கூடத்தில் இருந்த பார்வையாளர்கள் சிதறி ஓடினர். இதில் சிலர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து சம்பவ இடத்தில் இருந்த அரீகோடு காவல் துறையினர் கூறியதாவது,

’’கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு திடலில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது பட்டாசு சிதறி பார்வையாளர்கள் கூடத்தில் விழுந்து வெடித்தது. இதனால் அச்சமடைந்த பார்வையாளர்கள் சிதறி ஓடினர். இதில் சிலர் காயமடைந்தனர்.

பட்டாசு வெடித்ததிலும் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை’’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது!

காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த தாழ்வு மண்டலம்..!

தொடர் கனமழை... இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடர் மழை... விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கவலைப்படாதவர்கள் கடக ராசியினர்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT