கோப்புப்படம்.  
இந்தியா

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது.

DIN

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது.

பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தின் சித்ரதுர்காவில் வெள்ளிக்கிழமை இரவு கன்னட ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் ஓட்டுநரையும் தாக்கியதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திற்கு செல்லும் மகாரஷ்டிர அரசுப் பேருந்து சேவையை நிறுத்தி வைக்க அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வரை பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்படாது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

முன்னதாக பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேச தெரியாது எனக்கூறிய கர்நாடக பேருந்து நடத்துநர் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து!

பிரபாஸின் தி ராஜா சாப்! ரூ. 200 கோடி வசூலைக் கடந்தது!

ஒரே நாளில் ரூ. 15,000 உயர்ந்த வெள்ளி! கிலோ ரூ. 3 லட்சத்தைக் கடந்து வரலாறு காணாத உச்சம்!!

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக் கூட்டம்!

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்.. ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்: டிரம்ப்!

SCROLL FOR NEXT