தமிழகத்தில் ரூ.1,000 கோடி சைபா் மோசடி: மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை
தமிழ்நாட்டில் நடைபெற்ற ரூ .1,000 கோடிக்கும் அதிகமான (சைபா்) இணைய மோசடி வழக்குகள் குறித்து மேற்கு வங்கத்தில் உள்ள 8 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
‘தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடிக்கு மேல் நடைபெற்ற மோசடிகள் உள்பட பல இணைய மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. பல மாநிலங்களில் செயல்பட்டு வரும் இந்த இணையவழி குற்றவாளி குழுக்களின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கு வங்கத்தில் அதிகப்படியாக கண்டறியப்பட்டன.
அதனடிப்படையில், கொல்கத்தாவின் பூங்கா சாலை, சால்ட் லேக், பகுய்ஹாட்டி பகுதிகளில் உள்ள 5 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 8 இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
Advertisement
Advertisement
சால்ட் லேக் பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது, ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பகுய்ஹாட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை தொடா்கிறது’ என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.