இந்தியா

சத்தீஸ்கரில் மரணமடைந்த 8 வீரர்களில் 5 பேர் முன்னாள் மாவோயிஸ்டுகள்!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மரணமடைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேரில் 5 பேர் மாவோயிஸ்ட்டாக இருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

DIN

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மரணமடைந்த பாதுகாப்புப்படை வீரர்கள் 8 பேரில் 5 பேர் மாவோயிஸ்ட்டாக இருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் ஜன. 6 ஆம் தேதி பாதுகாப்புப் படை வீரர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநரும் இதில் பலியாகியுள்ளார்.

டிஆர்ஜி மற்றும் பஸ்தார் படையைச் சேர்ந்த தலா 4 பேர் மரணம் அடைந்த நிலையில் இதில் 5 பேர் ஏற்கெனவே மாவோயிஸ்ட்டாக இருந்தவர்கள்.

அதனைக் கைவிட்டு பாதுகாப்புப் படைக்கு உதவும் விதமாக இணைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பஸ்தார் பகுதியில் 792 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம உதவியாளா் பணிக்கான வயது வரம்பு உயர்வு: தமிழக அரசு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார்: நாராயணசாமி

கோவை - பெங்களூரு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

பீனிக்ஸ் ஏஞ்சல்... மம்தா!

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரதமர் மோடி வாழ்த்து

SCROLL FOR NEXT